Skip to content
Home » உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலத்தில்  உள்ளது ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம். இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை  பாதுகாப்புடன்   வாகனத்தில் அழைத்து சென்று வனத்தில் திரியும் புலிகளை  காட்டுவார்கள். அதுபோல இன்று  ஒப்பந்த ஊழியர்  ராமுகாகா(60) சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்று  வனத்தை  சுற்றிப்பார்க்க வைத்தார்.

அப்போது திடீரென ஒரு புலி  அந்த வாகனத்தின் மீது தாவிகுதித்து ராமுகாகாவை கவ்வி இழுத்துச்சென்று கடித்து குதறியது. இதில் அவர் இறந்தார். பின்னர் அந்த புலி தப்பி ஓடியது. ஒரே மாதத்தில் இந்த பூங்காவில் புலியால் கொல்லப்படும் 2வது நபர் ராமுகாகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!