Skip to content
Home » வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

வாக்களிக்க நீங்க ரெடியா?……2ம் நாளாக வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..

  • by Senthil

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தொகுதி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு

இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணியினை அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோன்று சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காட்டுமன்னார்கோவில், புவனகிரி மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகதங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் வைப்பறைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி.ராஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (ஜெயங்கொண்டம்) மாவட்ட வழங்கல் அலுவலர் (பெரம்பலூர்) சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) ராஜீ, உதவி ஆணையர் (கலால்) காட்டுமன்னார்கோவில், சந்திரகுமார், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!