Skip to content
Home » வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணி… புதுகை கலெக்டர் பார்வை…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி , புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொடர்பாக 23 கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்ட 179 விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், மாதிரி வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்குசாவடி மையங்களில்

மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , வட்டாட்சியர் சூரியபிரபு, இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மேலும் வாக்குசாவடி மையத்தில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள், மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் பணியினை கலெக்டர்  பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!