Skip to content

வால்பாறை..சிறுத்தை நடமாட்டம்… சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன வனப்பகுதி விட்டு வெளியேறும் வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் சாலை ஓரங்களில் உலா வருகிறது வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சுழற்சி முறையில் பணியாற்றி வன விலங்குகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனர் ரொட்டிக்கடை , கவர்கல், ஐயர் பாடி வாட்டர்ஃபால் பகுதிகளில் சிறுத்தை பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகம் உள்ளது

இதை அடுத்து சுற்றுலா பயணி இரவு நேரத்தில் சென்ற பொழுது ஐயர் பாடி பகுதியில் சாலையில் நான்கு வயது மதிப்பு தக்க சிறுத்தை ஒன்று சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோவை படம் பிடித்துள்ளார் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகிறது வனத்துறையினர் கூறுகையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலை ஓரம் நடமாட்டும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது தவறும் பட்சத்தில் வனத்துறை சார்பில் கடும் அபதாரம் விதிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படும் மேலும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!