Skip to content
Home » வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு அங்கு வந்த கருப்பம்பாளையம் திமுக ஊராட்சி மன்ற தலைவரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான கன்னிமுத்து வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்டார். இதை கேட்ட மணிகண்டனை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார் . அங்கு சென்ற பார்த்தபோது அங்கு இல்லாததால் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு கருப்பம்பாளையம் தோட்டத்துக்கு அழைத்துள்ளார்.

அங்கு தோட்டத்து வீட்டில் இருந்த கன்னிமுத்து மது போதையில் மணிகண்டனை அறையில் அடைத்து கைகளை கட்டிவைத்து கட்டையால் சரமரியாக தாக்கியுள்ளார் . இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு  பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கண்ணுமுத்து மீது பி.சி.ஆர் வழக்கு

ஆனைமலை காவல் நிலைய போலீசார் பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமியிடம் முறையிட்டதின் பெயரில் ஆனைமலை காவல் நிலையம் எம்எல்ஏ தலைமையில் முற்றுகையிட்டனர். சட்டமன்ற உறுப்பினர் கன்னி முத்துஏன் கைது செய்யவில்லை விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தார். திடீரென அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!