Skip to content
Home » குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

குடிநீர் விநியோகம் இல்லை…. காலிகுடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்…

கோவை, பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள புது காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அங்கலக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையில் உள்ள கைகாட்டி பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!