அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் வெ. நித்திஷ் குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் க.இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் சு.ஐயப்பன், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். வட்டார கல்வி அலுவலர் அ.மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்து மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் 150 மாணவர்கள்
கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற 25 மாணவர்களை வெளிநாடு கல்விபயணம் செல்ல உள்ளனர். அதில் அரியலூர் மாவட்டத்தில் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெ.நித்திஷ்குமார் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பள்ளி மாணவன் கூறும்போது:-
வானவில் நிகழ்ச்சியில் தான் வெற்றி பெற்று சென்னை சென்று அங்கும் வெற்றி பெற்று வெளிநாட்டுக்கும் செல்ல இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வானவில் என்ற நிகழ்ச்சியை ஏற்படுத்தி தந்த தமிழக முதல்வருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என்னைப் போன்று அனைவரும் அரசு பள்ளியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் வெற்றி பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மாணவனின் தந்தை வெங்கடேசன்:- இந்த புதுச்சாவடி அரசு பள்ளியில் எனது மகன் படிக்கிறான் என்று சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் அவன் இது போன்று பல சாதனைகள் செய்து வெற்றி பெற வேண்டும்.அனைத்து குழந்தைகளும் அரசு பள்ளியில் பயின்று இதுபோன்று சாதனைகள் புரிய வேண்டும் என்று கூறினார்.மேலும் தமிழக முதல்வருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். வட்டார கல்வி அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக முதல்வருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.