Skip to content
Home » 24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

24ம் தேதி வந்தே பாரத் ரயில்….. திருச்சியில் அமைச்சர் நேரு வரவேற்கிறார்

  • by Senthil

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை  வரும் 24ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  இதனை  பிரதமர் மோடி காணொளி வழியாபக தொடங்கி வைக்கிறார்.சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும்.

உத்தேசமாக ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி சாதாரண ஏசி வகுப்பு கட்டணம்  ரூ.1,620(ஜிஎஸ்டி உள்பட). ஏசி சொகுசு வகுப்பு கட்டணம்  ரூ.3,025 என  இருக்கலாம்.  சரியான கட்டண விவரம் நாளை அறிவிக்கப்படும்.

வந்தே பாரத் ரயில்  120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.

இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.

இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும். மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
24ம் தேதி  மாலை  5 மணி அளவில் திருச்சி வரும்  வந்தே பாரத் ரயிலை  திருச்சி ரயில் நிலையத்தில் அமைச்சர் கே. என். நேரு,  திருநாவுக்கரசர் எம்.பி ஆகியோர் வரவேற்று  வழியனுப்பி வைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!