Skip to content
Home » வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி……

வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி……

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய

நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறைவார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர். அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!