Skip to content
Home » வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் மகன் வினோத் மகள் மஞ்சு ஆகியோருடன் செல்போனில் பேசிய செந்தமிழ்ச்செல்வன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் செந்தமிழ் செல்வன் உயிரிழந்து விட்டதாக அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தமிழ் செல்வனின் மனைவி செந்தமிழ் செல்வி உள்ளிட்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தில் தலைவரை இழந்த குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது புலம்பி வருகின்றனர். இதுகுறித்து செந்தமிழ் செல்வனின் மனைவி செந்தமிழ் செல்வி கூறும் போது வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை தாயகத்து கொண்டு வந்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!