Skip to content
Home » வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்க வேண்டும்….. கலெக்டரிடம் மனு…

கோவை, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது கோவை மக்களின் நீண்ட கனவு எனவும் அவிநாசி சாலை திருச்சி சாலை மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் துவங்கி சுமார் 40 கோடி மதிப்பீட்டில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளதாகவும் இந்த நிலையில் முற்றிலுமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ள அவர்கள் இந்த பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என குறிபிட்டுள்ளனர்.

மேலும் நீலாம்பூர் செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை மாற்றினால் அது கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகும் எனவும் எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் இப்பணிகள் இதுவரை நடைபெற்றது எல்லாம் மக்கள் வரிப்பணம் தான் எனவும் தற்பொழுது இப்பணிகள் முற்றிலுமாக நிறுத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் வீணாக கூடும் என தெரிவித்தனர். மேலும் பாதி பணிகளில் நிறுத்தப்பட்ட அந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்குள் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களை சிலர் அரங்கேற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!