Skip to content
Home » வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதாலும் கடல் உள்பகுதியில் சீற்றமாக காணப்படுவதாலும் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை,
புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 மீனவர்கள் மீன் பிடிக்கச்

கடலுக்கு செல்லவில்லை. 1500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!