தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று (மே 6) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
தவெகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வாகியுள்ள நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.
தவெக 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 11 இடங்களை பெற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.
இன்று(மே 06) பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்
ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை தவெக தலைவர் விஜய், ஆளுநரிடம் கொடுக்கவிருப்பதாக தகவல்

