Skip to content
Home » விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

விஜயகாந்த் உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி…

  • by Senthil

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் நேற்று காலமானார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் கதறி அழுது வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சியினரும் பொதுமக்களும் குவிந்துள்ளனர். இன்று மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்

வைக்கப்பட்டிருக்கும்.  விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இன்று காலை தீவுத்திடல் வந்த  சூப்பர் ஸ்டார் ரஜினி , விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.   மனைவி பிரேமலதா, மற்றும் மகன்களுக்கு  ஆறுதல் தெரிவித்தார்.  பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:  கன்னியாகுமரியில்  படப்பிடிப்பில் இருந்தபோது  விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தன்.  விஜயகாந்தின் நட்பு அளவிட முடியாதது.  அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.  ஒருமுறை பழகியவர்கள் விஜயகாந்ததை மறக்கமாட்டார்கள். கேப்டன் என்பது விஜயகாந்த்துக்கு மிகவும் பொருத்தமான பெயர் . விஜயகாந்தின் கோபத்திற்கு  நியாயமான காரணம்  , இருக்கும்.  அவரிடம் எப்படி கோபம் இருந்ததோ அதே அளவு அன்பு இருக்கும். நட்புக்கொரு இலக்கணமாக  திகழ்ந்தவர் விஜயகாந்த். வாழ்க விஜயகாந்த நாமம். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடல் இவருக்கு தான் பொருத்தமானது.  என்று ரஜினி கண்ணீர்மல்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!