Skip to content
Home » விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

விக்கிரவாண்டியில் இன்று ….. சாராயம் குடித்த 7 பேர் பாதிப்பு…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடப்பதால் அந்த தொகுதியில் இன்று  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதி்களில் இன்று  புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயம்  விற்பனை செய்யப்பட்டுள்ளது.  கஞ்சனூர்  போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பூரிகுடிசை என்ற கிராமத்தில்  புதுச்சேரி சாராயம் குடித்த 7 பேர்  பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள்  முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பலியான நிலையில் இப்போது அருகில் உள்ள விக்கிரவாண்டியில்  புதுச்சேரி சாராயம்  விற்கப்பட்டு, அதை குடித்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!