Skip to content
Home » விக்கிரவாண்டி தொகுதி காலியானது…. மக்களவையுடன் இடைத்தேர்தல் நடக்குமா?

விக்கிரவாண்டி தொகுதி காலியானது…. மக்களவையுடன் இடைத்தேர்தல் நடக்குமா?

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  புகழேந்தி(71)  உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல்  இறுதிச்சடங்கு நேற்று  அரசு மரியாதையுடன் நடந்தது.  இந்த நிலையில்  விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக  சட்டப்பேரவை செயலகம்  இன்று அறிவித்தது. இதுபற்றிய தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.  விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த மே மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு  இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இது குறித்து  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம்,  நாடாளுமன்ற தேர்தலுமன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்குமா என்று கேட்டபோது,  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  வி்ரைவில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து  இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!