Skip to content
Home » கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட  முகமை இயக்குனர் கவிதப்பிரியா,  கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு தலைவர்  மேகலா முத்து,  பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை   சீதாபதி பிள்ளையார் கோயில் அருகே உள்ள கதர் அங்காடியில் இன்று மகாத்மா  காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கதர் விற்பனை  தொடக்க விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி கதர் விற்பனையை  குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி  பிரேமலதா,  கதர் அங்காடி மேலாளர் மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!