Skip to content
Home » விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

விராலிமலை அருகே விபத்து…. 2 ஊராட்சி தலைவர்கள் பலி… 3 பேர் காயம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வானதிராயன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில்  2  ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கார்  டிரைவர் காயங்களுடன் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்தை சேர்ந்த சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52) கிருஷ்ணபுரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யூ(52), நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஆகிய நான்கு பேர்  சென்னையில் நடைபெறும் ஊராட்சி மன்ற தலைவர்கள்  பேரணியில் பங்கேற்பதற்காக வாடகை காரில் சிவகாசியில் இருந்து மாலை புறப்பட்டனர். காரை பாஸ்கர்(53) ஓட்டினார்.

இவர்கள் வந்த கார்  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள வானத்திராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.

இதையடுத்து ஓட்டுநர் இடதுபுறமாக வண்டியை திருப்பிய போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52), கிருஷ்ணபுரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யூ (52) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர். சமுத்திரம் (55)  டிரைவர் பாஸ்கர் காயமடைந்து மணப்பாறை அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸார் நிகழ்விடம் சென்று காயம்பட்டவர்களை  ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!