மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தினார். 45 நாட்களுக்கு மட்டுமே நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கருக்கு பதிலாக 20 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். முப்போகம் விளையும் நிலங்களை வேறு திட்டங்களுக்கு மாற்றக் கூடாது என்றும், விவசாயத்துக்கு பயன்படாத நிலங்களை பிற திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
