Skip to content
Home » புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

புதுகையில் நலத்திட்ட உதவிகள்,….. கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.  தாட்கோ அலுவலகம் சார்பில் ஒருவருக்கு தூய்மை பணியாளர் நலவாரிய  அட்டை வழங்கினார். ஒரு பெண்ணுக்கு மகப்பேறு உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா  மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!