Skip to content
Home » மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தமுள்ள 63, 239 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அம்மாநிலத்தில் தொடர்ந்து மோதல் மற்றும் கலவரங்கல் நடந்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களில் கலவரம் வெடித்தது. சிடாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் வாக்குச்சீட்டுகளை தீ வைத்து எரித்தது.  மேலும் அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காளிகளை உடைத்து அதற்கும் தீ வைத்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் மோதல் சம்பவங்கள் அறிங்கேறிய நிலையில், இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!