Skip to content
Home » மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கேசவன் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து கேசவன் மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் அதிகமாகி அருகில் கிடந்த கட்டையை எடுத்து அடித்ததில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி உயிருக்கு போராடியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து வந்து , மனைவியை அடித்து கொலை செய்த கேசவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மது போதையில் மனைவியை கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!