Skip to content
Home » நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும்  உள்ளது. கணவன், மனைவி இடையே சந்தேக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை சுரேஷ் தாணிக்கோட்டகத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்த மனைவியை தனது பெத்தாச்சி காட்டில் உள்ள வீட்டிற்குஅழைத்து வந்துள்ளார்.  மனைவியின் மீது  ஏற்பட்ட சந்தேக பிரச்சனையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது  சுரேஷ்மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கடப்பாரையால் அடித்துக் கொலை மனைவி மீனாவை தேங்காய் உரிக்கும் பாறையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மீனா, திருத்துரைப்பூண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்று  முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் மீனா இறந்து விட்டார்.

தகவல் அறிந்து நாகை மாவட்ட கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ், வாய்மேடு  இன்ஸ்பெக்டர் கன்னிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். புகாரின் பேரில்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கடப்பாரையால் அடித்துக் கொலைவாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவின் உடலை திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரேத சோதனை செய்து மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன் சுரேஷை கைது செய்தனர். சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!