Skip to content
Home » திருச்சியில் நாளை…..மகளிர் தின விழா கொண்டாட்டம்…

திருச்சியில் நாளை…..மகளிர் தின விழா கொண்டாட்டம்…

  • by Senthil

தமிழ்நாடு  ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில்  மாவட்ட மாநாடு மற்றும்  உலக மகளிர் தின விழா நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி  புத்தூர்   டாக்டர் மதுரம் ஹாலில் நடக்கிறது.  விழாவுக்கு சங்கத்தின்  மாவட்ட துணைத்தலைவர் ஆர்தர் காட்வின் தலைமை தாங்குகிறார்.  இணை செயலாளர்  ஆஜிரா பீவி  வரவேற்கிறார்.  தொட்டியம் வசந்தா,  முசிறி பாலா ,வட்டார கல்வி அதிகாரி கவிஞர் ஜெயலட்சுமி,  மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,   மாநில துணைத்தலைவர்  கவிஞர் நந்தலாலா  ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

மாநிலத்தலைவர் அருள்ஜோஸ்,  விழா பேருரையாற்றுகிறார்.  மாநில பொருளார்  சந்திரசேகரன்  தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.  மாவட்ட செயலாளர் மாரிமுத்து நன்றி கூறுகிறார்.  மரியசூசைமாணிக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.  விழாவில்  மகளிருக்கு சிறப்பு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!