Skip to content
Home » அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி கிராமம் தேவேந்திரன் மகன் ராஜா (36) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரை ராஜா தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி  வந்தார். மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி தனது பைக்கில் கடத்திச் சென்று திருமானூர் அருகே உள்ள அழகியமணவாளனில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் செய்து திருப்பூருக்கு அழைத்துச் சென்றார்.அங்கு தனி வீட்டில் வைத்து சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக
ராஜா மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிந்து செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!