Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அன்பில், கீழ அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். இன்று முதல் வரும் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!