Skip to content
Home » பாலியல் தொல்லை…..வைரமுத்து ரொம்ப சீப்பான ஆளு…. மற்றொரு பாடகி பகீர் …

பாலியல் தொல்லை…..வைரமுத்து ரொம்ப சீப்பான ஆளு…. மற்றொரு பாடகி பகீர் …

  • by Senthil

கவிஞர் வைரமுத்து  தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் உள்ளது.  அதே நேரத்தில் பாலியல் புகார்களும் அவரது வயதை விட அதிக அளவில் குவிந்துவிடும் போல இருக்கிறது. ஏற்கனவே வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் கூறி இருந்தார்.

தற்போது  வினைதா என்ற பின்னணி பாடகியும், வைரமுத்து மீது பகீர் புகார் கூறி உள்ளார். இவர் யுவன் சங்கர் ராஜா உள்பட பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார். இவர் வைரமுத்து மீது புகார் கூறிய வீடியோவை தான் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் வினைதா கூறியதாவது : “சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக பேசினார். நான் அதை ஆதரித்தேன். ஏனெனில் அவர் உண்மையை பேசினார். அவருக்கு நடந்ததை போல் எனக்கும் நடந்தது. அதுவும் வைரமுத்துவால் தான்.
அவர் நல்ல மனிதரே இல்லை. அவர் என்னை பாட அழைத்தார், அதோடு ஒரு இடத்தை சொல்லி அங்கு தனியாக வருமாறு என்னை அழைத்தார். அவர் எப்போதும் முகத்தை பார்த்து பேசவே மாட்டார். அந்த அளவுக்கு சீப்பாக நடந்துகொள்வார். வைரமுத்து இதுபோன்று நிறைய பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். அது எனக்கு தெரியும். எப்போ அவரை பார்த்தாலும், வந்துட்டாண்டா என்று தான் தோன்றும்” என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வினைதா.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சின்மயி, வினைதாவை போன்று தமிழக அரசியல் வாதிகளால் ஆதரிக்கப்படும் இந்த தமிழ் கவிஞருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம் பாடகி புவனா சேஷன் என்பவர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து வெளிப்படையாக பேசிய நிலையில், தற்போது மேலும் ஒரு பாடகி வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளதால் மீடூ விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!