பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சாலையை கடக்க முயன்ற பேருந்து மீது திடீரென சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பேருந்து பெரும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சுமார் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
