Skip to content
Home » 11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 62 வயதான குற்றவாளி, லெப்ரிபாரா பிளாக்கில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது 11 சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த குற்றம் தொடர்பாக ஜூன் 14, 2016 அன்று கைது செய்யப்பட்ட அவர், அன்றிலிருந்து சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி மகேந்திர குமார் சுத்ரதர், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!