சென்னை, அசோக் நகர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் ரகுராமன் மகன் கோகுல்ராம் (19). இவர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று, இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வு நடைபெற்றதால், கல்லுாரியின் 5வது மாடியில் தேர்வு நடத்தப்பட்டது.
அப்போது அருகில் இருந்த மாணவரை பார்த்து காப்பி அடித்தால் தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை கண்டித்துள்ளார். மேலும் தேர்வுத்தாளை வாங்கி வெளியே அனுப்பியதாகவும், பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.