Skip to content
Home » 11-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை….

11-வது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை….

சென்னை, அசோக் நகர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் ரகுராமன் மகன் கோகுல்ராம் (19). இவர் பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். நேற்று, இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் தேர்வு நடைபெற்றதால், கல்லுாரியின் 5வது மாடியில் தேர்வு நடத்தப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மாணவரை பார்த்து காப்பி அடித்தால் தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த பெண் பேராசிரியர் கோகுல்ராமை கண்டித்துள்ளார். மேலும் தேர்வுத்தாளை வாங்கி வெளியே அனுப்பியதாகவும், பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கோகுல்ராம், நேராக கல்லூரியின் 11வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானர். இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பி அடித்தைக் கண்டித்தால் பொறியியல் மாணவர் 11வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!