அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார். இம்முகாமில்,மாவட்ட வருவாய் அலுவலர் மரூ ம.ச.கலைவாணி,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் லெட்சுமணன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மருதமுத்து, ஆண்டிமடம் வட்டாட்சியர் இளவரசன், ஊராட்சி மன்றத்தலைவர் இலையூர் மேற்கு தங்கம் அறிவழகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.