Skip to content
Home » பனி மூட்டத்தால் விபத்து…. பெங்களூரு….. லாரி மீது கார் மோதி 15 பேர் பலி

பனி மூட்டத்தால் விபத்து…. பெங்களூரு….. லாரி மீது கார் மோதி 15 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 15 பேர் காரில் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த இவர்கள் தசரா விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரம் மாவட்டத்தில் பகேபள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.  அப்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால்  கார் டிரைவருக்கு சாலை சரியாக தெரியவில்லை.

அப்போது சாலையின் ஓரம் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதன் மீது கார் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 15 பேர் பலியாகினர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!