இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியால் ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.