திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு அய்யாளம்மன் படித்துறை பகுதியில் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில், மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் குப்பைகள் தரம் பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருச்சியில் நுண் உரம் செயலாக்க மையத்தில் ஆய்வு
