அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆகிய 2 துறைகள் இருந்தது. அவர் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இருதய ஆபரேசன் செய்ய வேண்டி உள்ளதால் தொடர்ந்து அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவரிடம் உள்ள மின்துறையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றிய கோப்பு கவர்னர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் இருந்து இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கவர்னர் அறிவிப்பு வெளியான பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்.