Skip to content
Home » திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

  • by Senthil

திருச்சி  மாவட்டம் தொட்டியத்தை  அருகே  திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் நாமக்கல் மற்றும் திருச்சி நோக்கி சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறப்படும் வாலிபர் ஆகியோர் சுங்கச்சாவடி அருகே வாகனங்களை மறித்து லஞ்சம் கேட்பது  போல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய  திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல், செல்வம் ஆகிய இரண்டு எஸ்.எஸ்.ஐ மற்றும் தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறி திருச்சி நாமக்கல் சாலையில் வாகனங்களை மறித்து பணம் வசூல் செய்த முசிறி தா.பேட்டை ரோட்டில் வசிக்கும் ராஜ்கமல் வயது (32) என்பவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!