இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான
காசோலையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் , இந்த நிதி வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் முதல்வர் ஸ்டாலின் காசோலையை வழங்கினார்.
தலைமை செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.