Skip to content
Home » திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், தனபால் ஆகிய 2 பேரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை பிடித்து ரூ.1050 பணமும் , 2 டூவீலர்கள், 2 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடம் கைது செய்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!