Skip to content
Home » கரூர் தாந்தோணிமலை கோயிலில் ரூ.26 லட்சம் காணிக்கை

கரூர் தாந்தோணிமலை கோயிலில் ரூ.26 லட்சம் காணிக்கை

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தென் திருப்பதி என்றழைக்கப்படும் இந்த திருக்கோவிலுக்கு கரூர் மட்டும்மல்லாது, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

குடைவரை கோவிலான இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவிலின் புரட்டாசி தேரோட்டம் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். அந்த உண்டியல் 2 மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கமாக கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இன்று கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல் கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து எண்ணும் பணியினை மேற்கொண்டனர். இன்று காலையில் தொடங்கிய பணி மதியம் 1.30 மணியளவில் முடிக்கப்பட்டது. கடந்த 2 மாதத்தில் 26 லட்சத்து, 14 ஆயிரத்து, 756 ரூபாய் பணம் மற்றும் காசுகளாகவும், 27 கிராம் தங்க நகையும், 202 கிராம் வெள்ளி காசு மற்றும் ஆபரணங்களாக உண்டியல் மூலம் கிடைத்துள்ளது. அடுத்து புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால் அடுத்த 2 மாதம் கழித்து எண்ணப்படும் உண்டியல் எண்ணப்படும் போது இன்னும் அதிகளவிலான தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக கோவில்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!