Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 28 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழகத்தில் இன்று  அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை நான்கு மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர் ,கடலூர் ,மயிலாடுதுறை ,நாகப்பட்டினம் ,தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ,சிவகங்கை ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!