Skip to content
Home » நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு  நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று மதியம் இஸ்ரோ வெளியிட்ட தகவலில்,  தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும். இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.

விக்ரம் லேண்டர் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். இதை “7 மினிட்ஸ் ஆப் டெரர்” என்று அழைக்கிறார்கள். ஏன் என்றால் இந்த 7 நிமிடங்கள் என்பது விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். அந்த சமயத்தில் லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் கால்பதிக்கும் இந்தியாவின் சாதனையை காண இந்தியர்கள் 140 கோடி பேரும் ஆவலுடனும், துடிப்புடனும்  இருக்கிறார்கள்.  லேண்டர் தரையிறங்கும் காட்சியை விரிவாக , தௌிவாக பார்க்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  உள்ளது. சென்னையிலும் கோளரங்கத்தில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  சந்திரயான் வெற்றிக்காக  சமய பாகுபாடின்றி பிரார்த்தனைகள் ஒருபுறம் நடந்து வருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆர்வத்துடன் உள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இந்தியாவின் சாதனையை உலகமே மெச்சப்போகிறது. இந்தியர்கள்  என நாம் பெருமிதம் கொள்ளும் நேரத்திற்கு  சிறிது நேரம் காத்திருப்போம். வெற்றி நம் வசம்  என்பது மட்டும்  நம் விஞ்ஞானிகளால் உறுதியாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!