நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று பேரை கடலோர காவல் குழும போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அவர்களது படகில் 50 லிட்டர் பெட்ரோல் டார்ச் லைட் பெயரளவிற்கு நண்டு பிடி வலை ஆகியவை இருந்தது. சீனாவில் பயன்படுத்தக்கூடிய ஸ்பீட் எஞ்சின் மோட்டார் அந்த படகில் பொருத்தப்பட்டிருந்தது.
ஆறுகாட்டுத்துறையில் கரை சேர்த்த மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கடற்கொள்ளையர்கள் என தெரியவந்தது. அவர்கள் தமிழக மீனவர்கள் படகுகளை கடலில் மறித்து கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்டு இருந்தது தெரியவந்தது. ஆற்காட்டு துறை மீனவர்கள் தாங்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் பொழுது அந்த மூன்று பேரில் சிவகுமார் என்பவரை அடிக்கடி கடலில் பார்த்ததாகவும் தங்கள் படகில் மீன் பிடிக்க செல்லும் பொழுது கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தங்களை தாக்கியதாதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மூன்று பேரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேதாரண்யம் பகுதியில் 300 கிலோ கஞ்சா பிடிபட்டு ஆறு பேர் கைதாகி உள்ள நிலையில் தற்பொழுது இந்திய கடல் எல்லையில் ஸ்பீடு படகுடன் ஸ்ரீலங்கா கடற்கொள்ளையர்கள் பிடிபட்டதும் பொதுமக்களிடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று கடற்கொள்ளர்களையும் கைது செய்து வேதாரண்யத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னையில் உள்ள புழல் சிறைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.