Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி –

கேரளாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி –

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ள அபாயம் மற்றும் கனமழை தொடர்வதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தின் மலையோரப் பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகளும் மண்ணும் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்புக் குழுவினர் மீட்டுப் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு, மலப்புரம், ஆலப்புழா, பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இயங்கும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிவப்பு (Red) மற்றும் ஆரஞ்சு (Orange) எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!