Skip to content
Home » திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

திருச்சியில் 3 மாணவர்கள் பலி….. லாரி மீது பைக் மோதல்

  • by Senthil

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சென்னையை சேர்ந்த வல்லரசு(21) சேலத்தை சேர்ந்த ரங்கநாதன்(22) அரியலூரை சேர்ந்த லெனின்(21) ஆகிய மூன்று மாணவர்களும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் மூவரும் இன்று அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மாத்தூர் அருகே சென்றபோது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்ற லாரியில் அவர்களின் இருசக்கர வாகனம் மோதியது. இதில் வல்லரசு மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லெனினை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. லாரியை ஒட்டி வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி யை கைது செய்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த மூன்று மாணவர்களின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து திருச்சி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!