அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகளின் வலையில் 4 இந்திய நிறுவனங்கள் சிக்கியுள்ளன. போர்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி என்ற சுங்கத் தரகர் நிறுவனமும், அதன் கூட்டாளிகளான இந்திரிஸ்மியா அஷ்ரப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோர் ஈரானிய பெட்ரோலிய வேதிப்பொருட்களை இறக்குமதி செய்ய வழிவகுத்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சதாசிவா ஓவர்சீஸ் லிமிடெட், பிபி சாப்டெக் பிரைவேட் லிமிடெட், பிரக்ருதீஸ் இன்ப்ரா இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் நடவடிக்கையை எதிர்கொள்கின்றன.
