லோக் பவனில் ஆளுநரை சந்தித்த பிறகு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்தித்தார். குதிரை பேரம் பற்றி புகார் அளித்து 100 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை இல்லை. தவெகவின் குதிரை பேரம் தொடர்வதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார். பணம், பதவிக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுகின்றனர். தூயசக்தியின் முகமூடியை கிழிக்கவே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
