Skip to content
Home » திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

  • by Senthil

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் காதலருடன் வந்த 17 வயது சிறுமியை 4 காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின்படி காவல் உதவி ஆய்வாளர் சசிக்குமார், நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத்,துவாக்குடி காவல் நிலைய காவலர் சித்தார்த், காவலர் சங்கரபாண்டி
ஆகிய 4 பேர் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் நான்கு காவலர்களும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில்… இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை மேற்கொண்டதில்  பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!