தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை இன்று மதியம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி மிசோரமில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டீஸ்கரில் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக நவம்பர் 7ம் தேதியும், 2ம் கட்டமாக நவம்பர் 17ம் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு வரும் 13ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
230 தொகுதிகளைக்கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வரும் 21ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
119 தொகுதிகளைக்கொண்ட தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு நவம்பர் 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் ஒரே கட்டமாக டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது. 5 மாநிலங்களில் சட்டீஸ்கரில் மட்டுமே 2 கட்ட தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.