Skip to content
Home » திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

திருச்சி உள்பட 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று ED விசாரணைக்கு ஆஜர்

  • by Senthil

தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பணமுறைகேடுகள் நடந்துள்ளது என மத்தி்ய அரசின் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை திருச்சி, கரூர், தஞ்சை, அரியலூர், வேலூர் மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தேர்தல் முடிந்ததும் விசாரணைக்கு ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று சென்னையில் உள்ள  அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!