தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ெ சய்யப்பட்டனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா மாற்றப்பட்டு அந்த துறை செயலாளராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார். இதுபோல தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டார். தொழில் துறை மேலாண் இயக்குனராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். காகர்லா உஷா சுற்றுலாத்துைற செயலாளராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் அந்த துறை செயலாளர் காகர்லா உஷா மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.